அன்புமணி:

பெயர்: இரா.நாகலிங்கம்
புனைபெயர்: அன்புமணி
பிறந்த இடம்: ஆரையம்பதி
(06.03.1935)
தொடர்புகளுக்கு:
முகவரி: பார்வதி அகம், ஆரையம்பதி –
1, மட்டக்களப்பு
தொலைபேசி:
94652246041

 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாவல், நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • இல்லத்தரசி
  • வரலாற்றுச் சுவடுகள்

நாவல்:

  • ஒரு தந்தையின் கதை

குறுநாவல்:

  • ஒரு மகளின் கதை

கட்டுரைத் தொகுப்புகள்:

  • தமிழ் இலக்கிய அறிமுகம்
  • எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அறிமுகம்
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

விருதுகள்:

  • சாகித்திய மண்டல நாடகப் போட்டி – முதற்பரிசு – திரைகடல் தீபம் - 1962
  • தமிழ்மணி, கலாபூஹணம் விருதுகள் - இந்து கலாச்சாரத் திணைக்களம்
  • ஆளுநர் விருது – திருகோணமலை கல்வி கலாச்சார அமைச்சு

இவர்பற்றி:

  • அறுபது சிறுகதைகளுக்கு படைத்துள்ளார். இவரது படைப்புக்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கங்கை, சிந்தாமணி, கல்கி, கலைச்செல்வி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.  இவர் கிழக்கிழங்கையின் இலக்கிய வழிநடத்துநர். இவரது ஆக்கங்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன.  இவர் மலர் என்ற இலக்கியச் சஞ்சிகை மூலம் (1970 – 71)  ஈழத்தின் படைப்பிலக்கியத்திற்குப் புத்துயிர் வழங்கியவர். ஈழத்தின் ஏனைய பிரதேசங்களை இணைக்கும் இலக்கியப்பாலமாக இச்சஞ்சிகை அமைந்தது. மேலும் இவரது நாடகங்கள், பேச்சுக்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அந்தவகையில் நமது பாதை என்ற தொடர்நாடகம் குறிப்பிடத்தக்கது. இவரது நாடகங்களில் திரைகடல் தீபம், நமது பாதை, சூழ்ச்சிவலை, ஆத்ம திருப்தி என்பன குறிப்பிடத்தக்கன.